தமிழ்நாடு

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.

இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வின் போது காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்