தமிழ்நாடு

மொஹரம் பண்டிகை - நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

தந்தி டிவி

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று 'துவா' ஓதினர். முகமது நபியின் பேரன் இமாம் ஹசர் உசைன், கர்பலா நகரில் நடைபெற்ற போரில் இறந்த நாளை தியாக திருநாளாகவும், ஹிஜ்ரி வருடப்பிறப்பை மொஹரம் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில், புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், மொஹரம் சிறப்பு துவா நடைபெற்றது. இதையடுத்து மர்சியா எனும் இமாம் ஹசர் உசைன் வரலாற்றை வாசித்து, துவா ஓதியபடி, கால்மாட்டு வாசல் மற்றும் பீர்ரோடும் தெரு வழியாக ஊர்வலமாக சென்று கடற்கரையில் அமைந்துள்ள சில்லடி தர்கா சென்றடைந்தனர். தொடர்ந்து தர்காவிற்கு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை