தமிழ்நாடு

மொஹரம் பண்டிகை - நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

தந்தி டிவி

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று 'துவா' ஓதினர். முகமது நபியின் பேரன் இமாம் ஹசர் உசைன், கர்பலா நகரில் நடைபெற்ற போரில் இறந்த நாளை தியாக திருநாளாகவும், ஹிஜ்ரி வருடப்பிறப்பை மொஹரம் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில், புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், மொஹரம் சிறப்பு துவா நடைபெற்றது. இதையடுத்து மர்சியா எனும் இமாம் ஹசர் உசைன் வரலாற்றை வாசித்து, துவா ஓதியபடி, கால்மாட்டு வாசல் மற்றும் பீர்ரோடும் தெரு வழியாக ஊர்வலமாக சென்று கடற்கரையில் அமைந்துள்ள சில்லடி தர்கா சென்றடைந்தனர். தொடர்ந்து தர்காவிற்கு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்