பரந்தூரில் கட்டப்பட்டுள்ள மாதிரி வீடுகள் - கிராம மக்கள் அதிர்ச்சி
பரந்தூர் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள மாதிரி வீடுகளைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பரந்துார் விமான நிலைய திட்டத்திற்காக நில எடுப்பு உள்ளிட்ட பணிகளில் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ ஈடுபட்டுள்ளது. நிலம் எடுப்பதால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இந்நிலையில், பயனாளிகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட உள்ள வீடுகளின் 2 மாதிரிகள், பரந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.