தமிழ்நாடு

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரி திறந்த நிலையில், அடையாற்றில் கரைகளின் உயரம் வரை தண்ணீர் ஓடுகிறது. மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், அந்தப் பகுதிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அடையாறு பாலத்தில் நின்று தண்ணீரின் வேகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, திடீர் நகர், எம்.ஜி.ஆர் நகர், சூளைபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்ற ஸ்டாலின், வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார். பின்னர், அப்பகுதி மக்களுக்கு கோரைப் பாய், ஆடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஸ்டாலினுடன் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு