தமிழ்நாடு

முதல்வரின் இ-மெயிலுக்கு அதிர்ச்சி மெயில்.. டிஜிபி பெயரில்... அதிர்ந்த தலைமை செயலகம்... அம்பலமான பகீர் பின்னணி...

தந்தி டிவி

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக மர்மநபர்கள் இவ்வாறு மிரட்டல் விடுத்து வருகின்றனர். மிரட்டல் விடுக்கும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு டிஜிபி பெயரில் போலியான ஒரு இ மெயிலை உருவாக்கி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கு ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள ராணுவ பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் தலைமைச் செயலகத்திற்கும் வெடி குண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி மர்மநபர் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டல் தமிழக முதல்வரின் இ.மெயிலுக்கு அனுப்ப பட்டிருப்பது தெரியவர, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை