தமிழ்நாடு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள் உரிமை பறிப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள உத்தரவு - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள் உரிமை பறிப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்றார்.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று ஆண்டிற்கு இடைக்கால நீக்கம் செய்வது உச்சபட்ச கொடுமை என விமர்சித்துள்ள ஸ்டாலின்,

கொரோனா நெருக்கடி சூழலில், தொழிலாளர் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க தேவையில்லை என விலக்கு அளிப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும்

தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொழிலாளர் விரோத முடிவினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்ட ஸ்டாலின்,

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சிறப்பு அறிவுரையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்