பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என அரசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், தரமான பால் விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என கேள்வி எழுப்பி உள்ளார். கடமை தவறிய அ.தி.மு.க. அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.