தமிழ்நாடு

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் திமுக எம்.பி.கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், திமுக கொள்கையில் இருந்து என்றைக்கும் பின்வாங்காது என்று கூறினார். முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தேவைதானா என்று கூறிய ஸ்டாலின், அதனால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பயன் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருதுக்களை கேட்காமல், அங்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அது சர்வாதிகாரத்தோடு நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு