தமிழ்நாடு

ஜெ.மரணம்;யாரும் தப்ப முடியாது - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தந்தி டிவி

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து, "ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்" இடையே நான்கு வருடங்களாக ஒரு நாடகம், பல பாகங்களாக அரங்கேறி வருவதாக கூறி உள்ளார். அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் மீது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி வைத்த குற்றச்சாட்டு, விசாரணையை முடக்கி வைத்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார். விசாரணைக் கமிஷனை பெயருக்காக அமைத்து, பதவி சுகத்தை முன்னிறுத்தி, ஒரு முதலமைச்சரின் மரணத்தில் உள்ள சதியை மறைக்க, அரசியல் விளையாட்டு நடத்தி வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் உறுதிபடக் கூறி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்