தமிழ்நாடு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கு : தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக அப்போதைய ஆட்சியர் சுப்பிரமணியன், நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"அரசியல் உள்நோக்கத்துடன் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி