தமிழ்நாடு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கு : தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு

மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
மு.க.அழகிரி மீதான தேர்தல் வழக்கை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக அப்போதைய ஆட்சியர் சுப்பிரமணியன், நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"அரசியல் உள்நோக்கத்துடன் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை