"வாய்ப்பு தந்தால் போதும்" - மிஸ் திருநங்கை போட்டியில் 2ம் இடம் பிடித்த சாய்ஸ்ரீ விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த சாய்ஸ்ரீ, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். திருநங்கைகளின் கல்விக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் தங்களின் முன்னேற்றத்தை நிரூபித்துக் காட்டுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.