கும்பகோணத்தில் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்ற 72ஆம் அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில், மதுபோதையில் தள்ளாடிய கூட்டுறவு சங்க அலுவலரால் சலசலப்பு ஏற்பட்டது. கும்பகோணம் MLA அன்பழகன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டுறவு சங்க அலுவலர் செல்வராஜன் மது போதையில் மேடையில் தள்ளாடினார். பின்னர் திமுகவினரும், சங்க ஊழியர்களும் அவரை கைத்தாங்கலாக மேடையிலிருந்து கீழே இறக்கி அறைக்குள் அழைத்து சென்றனர். அமைச்சர் பங்கேற்ற விழாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது