தமிழ்நாடு

"திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தந்தி டிவி
அரசின் திட்டங்களை பெற மக்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூரில், புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான் புதிய வழித்தடம் கிடைத்ததாக கூறினார். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்றும், அழாமல் இருந்து விட்டால் அதற்கான தேவை தெரியாது என்றும் கூறினார். தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"