தமிழ்நாடு

"தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகளை அவர் துவக்கி வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மிகச் சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையமாக திகழ்ந்து வருவதாகவும், ஐ.சி.எம்.ஆர். உள்ளிட்டவை பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்போது ஆயிரம் படுக்கை வசதிகளுடன் செயல்படும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு