தமிழ்நாடு

"மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கூட்டமாக வருவார்கள், வாக்கு கேட்பார்கள், பின்னர் சென்றுவிடுவார்கள் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வெளிநடப்பு பணியை தான் அவர்கள் செய்து வருவதாகவும் விமர்சித்தார். ​எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார். அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் எந்த பணிகள் விடுபட்டு இருந்தாலும் அதை நிறைவேற்றி தருவோம் என்ற உத்தரவாதத்தை தருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு