தமிழ்நாடு

"தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

"மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்"

தந்தி டிவி

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனியார் பள்ளியொன்றில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவன், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கே.ஏ. செங்கோட்டையன்

எச்சரித்தார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு