பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் சரத்குமார் | 'சிங்கப்பெண்' வேடமிட்டு கலக்கிய சுட்டீஸ் குரோம்பேட்டை - பள்ளி விழாவில் அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள SCS மெட்ரிகுலேஷன் பள்ளியின் மழலையர் கலை விழாவில், தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் முதலமைச்சரின் 'சிங்கப்பெண்' திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் பேசிய அமைச்சர் சரத்குமார், கல்வியுடன் சேர்த்து மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு பெற்றோர்கள் தங்களின் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.