தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்து வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து வழக்கை முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் முடிக்கலாமா என்றும் வழக்கு விசாரணையை ஏன் தொடரக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, 15 நாள்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும் என்றும், இதே அவசரம் அனைத்து வழக்குகளிலும் இருக்குமா என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சதவீதம் தான் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை