தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்து வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து வழக்கை முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் முடிக்கலாமா என்றும் வழக்கு விசாரணையை ஏன் தொடரக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது, 15 நாள்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும் என்றும், இதே அவசரம் அனைத்து வழக்குகளிலும் இருக்குமா என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சதவீதம் தான் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, 750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி