தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஆளுநருக்கு ம.நீ.ம கட்சியினர் தபால் அனுப்பி போராட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஆளுநருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, ராஜகோபுரம் எதிரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அக்கட்சியினர், பின்னர் அங்கிருந்து காந்தி வேடமணிந்த சிறுவனுடன் ஊர்வலமாக அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு தங்களது மனுவை தபாலில் அனுப்பினர். இதற்கு மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்