தமிழ்நாடு

"திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 10 ஆயிரத்து 421 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதேபோல , மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக, மத்திய அரசு, அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை