தமிழ்நாடு

கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆறுதல்

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். மின்கசிவு காரணமாக கடையில் ஏற்பட்ட திடீர் விபத்தில், 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தீ விபத்தை கண்டு அங்கே வந்து, தீயை அணைத்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC