தமிழ்நாடு

பாடலாசிரியர் தாமரையை பாராட்டிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

இளைஞர்கள் தங்களுக்குள் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி வருவது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், அகராதியியல் விழிப்புணர்வு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாடலாசிரியர் தாமரை தமது பாடல்கள் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு வழக்கொழிந்த தமிழ்ச் சொல்லை பயன்படுத்தி வருவது, வரவேற்கத்தக்கது என்றார்.

முன்னதாக, புதிய கலைச் சொற்களை உருவாக்கிய மாணவிகளுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ