தமிழ்நாடு

"ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டு விரைவில் அறிமுகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை கோடம்பாக்கம் மண்டலம், பாண்டி பஜார் பகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மருத்துவ முகாமில் பங்கேற்று ஆய்வு நடத்தினார். பின்னர், பொதுமக்கள், தூய்மை பணியாளர்களுக்கு, முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் பணியாற்ற கூடிய பணியாளர்களுக்கும் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார். ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்தப்படும் என்றும், அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி