தமிழ்நாடு

"நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களின் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற முறையானது உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் சாலைகளை சீரமைத்தல், அகலப்படுத்துதல், மழை நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பணம் சேமிக்கப்பட்டு வருவதாகவும், இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை