தமிழ்நாடு

"கோவையில் தங்க நகை தொழில் பூங்கா" - அமைச்சர் பெஞ்சமின்

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்தார். இதே போல் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளிலும் புதிய தொழிற்பேட்டை அமைப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்