திண்டுக்கல் வெள்ளோடு பகுதியை சேர்ந்த சோபியாவின் மகள், பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மகளைப் பார்ப்பதற்காக சோபியா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பைக்கின் பின்னால் வேகமாக வந்த மினி லாரி மோதியதில், சோபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பைக்கை ஓட்டி சென்ற இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்ற தாய் விபத்தில் பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.