தமிழ்நாடு

மறைந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல் தகனம்

பனிப் புயலில் சிக்கி காஷ்மீர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல், சொந்த ஊரான டி. அரசப்பட்டியில் 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

தந்தி டிவி
பனிப் புயலில் சிக்கி காஷ்மீர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல், சொந்த ஊரான மதுரை மாவட்டம் டி. அரசப்பட்டியில் 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பணியில் இருந்த போது பனிபுயலில் சிக்கி காயமடைந்துள்ளார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, உறவினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. மறைந்த பால்பாண்டியின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை