தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். 31ம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்