தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் பிறந்த நாள் விழா

கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

கேரள மாநிலம், பாலக்காடு அருகே, வடவனூர் கிராமத்தில் அமைந்துள்ள நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட அந்த நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆரின் அபூர்வ புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி கூடமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடவனூர் நினைவு இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நினைவு இல்லத்தை கேரள சுற்றுலா தல பட்டியலில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன் என உறுதி அளித்துள்ளார்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு