தமிழ்நாடு

2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!

மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும் கூட, பாசன ஏரிகள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை

தந்தி டிவி

மேட்டூர் அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களாகியும், பாசன ஏரிகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள காவனி ஏரி, சானுரப்பட்டி ஏரி, ஏலா ஏரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உடனடியாக ஏரிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி