தமிழ்நாடு

2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!

மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும் கூட, பாசன ஏரிகள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை

தந்தி டிவி

மேட்டூர் அணை 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களாகியும், பாசன ஏரிகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள காவனி ஏரி, சானுரப்பட்டி ஏரி, ஏலா ஏரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உடனடியாக ஏரிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"