மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக, வரும் 17ந் தேதி முதல் டிசம்பர் 31ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.