ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. அதனை தொடர்ந்து பண்டிகைகால சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை எழில்மிகு காட்சிகளை கண்டு ரசித்தனர்.