தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடங்காத நிலையில், இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்களை சந்தித்துள்ளார்.அவர்களிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்களை உடனடியாக நியமித்து, திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுப்படுத்துவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாக, சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், திட்டத்திற்கான நிதி 2 ஆயிரம் கோடியா உயர்ந்துள்ளதால், அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதலை பெற்று முடிக்கவும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான, ஜப்பான் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் இறுதிக்குள் கையெழுத்தாகும் என அரசு செயலாளர்கள் கூறியதாக, சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்