தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தயாரிக்கும் இடம் குறித்து வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில், தேவாரம், திருவாசகம் பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருஞானசம்பந்தர் மண்டபத்தில் லட்டு தயாரித்து வழங்கப்பட்டு வரும் சூழலில், அங்கு தேவார பாடசாலை அமைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, மண்டபத்தில் 291-வது மதுரை ஆதினம் பொறுப்பில் இருந்தவரை தேவார பாடசாலை நடத்தப்பட்டதாகவும், இடையில் அவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோயில் வரலாறு, மீனாட்சி கோயில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், தேவார பாடசாலை அமைக்கவும், மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.   

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை