தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - சுந்தரவடிவேல், ஆலய பாதுகாப்பு குழு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில் இடிந்த வீர வசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக ஆலய பாதுகாப்பு குழு குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில துணைத்தலைவர் சுந்தரவடிவேல், அறநிலை துறை அமைச்சர், கோவில் தக்கார் என யாரும் சிரத்தையோடு பணிகளை செய்யவில்லை என புகார் கூறினார். இதனால் பக்தர்கள் மனவேதனையுடன் உள்ளதாகவும், பணிகளை துரிதப்படுத்தி மீனாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை