கர்நாடகாவில் கடல் அலையில் சிக்கி 2 தமிழக மருத்துவ மாணவிகள் பலி
கர்நாடக மாநிலம் கோகர்ணா கடற்கரை அலையில் சிக்கி திருச்சி தனியார் கல்லூரி மருத்துவ மாணவிகள் இருவர்
பரிதாபமாக உயிரிழந்தனர். இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை முடித்துவிட்டு மாணவர்கள் விடுமுறைக்கு கர்நாடகாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சூரிய அஸ்தமனத்தை காண கோகர்ணா கடற்கரைக்கு சென்ற 23 பேரில், கனிமொழி மற்றும் ஹிந்துஜா அலையில் சிக்கி உயிரிழந்தனர்.