தமிழ்நாடு

துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை மருத்துவ படிப்பான மருந்தாளுநர் சேர்க்கையில், இடஒதுக்கீட்டை விட கூடுதலாக 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 தனியார் கல்லுாரிகளில், தலா 1 மாணவர் என 5 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து, துணை மருத்துவ படிப்புகளிலும் முறைகேடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு