தமிழ்நாடு

துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை மருத்துவ படிப்பான மருந்தாளுநர் சேர்க்கையில், இடஒதுக்கீட்டை விட கூடுதலாக 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 தனியார் கல்லுாரிகளில், தலா 1 மாணவர் என 5 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து, துணை மருத்துவ படிப்புகளிலும் முறைகேடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்