தமிழ்நாடு

துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை மருத்துவ படிப்பான மருந்தாளுநர் சேர்க்கையில், இடஒதுக்கீட்டை விட கூடுதலாக 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 தனியார் கல்லுாரிகளில், தலா 1 மாணவர் என 5 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து, துணை மருத்துவ படிப்புகளிலும் முறைகேடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி