தமிழ்நாடு

"சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தந்தி டிவி
சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் சைக்கிள் பேரணி நடத்தினர். அதை தொடங்கி வைத்த அவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்கள்தான் சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பினர் என்றும் பெருமையாக கூறினார். அரசு பள்ளிகளில், தமிழில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை