தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி மயிலாடுதுறையில் 12 ஆயிரம் கடைகள் அடைப்பு

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை கோட்டத்தில் 12 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக மக்கள் போராடி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரியை நாகையில் அமைக்காமல் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்