தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி மயிலாடுதுறையில் 12 ஆயிரம் கடைகள் அடைப்பு

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை கோட்டத்தில் 12 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக மக்கள் போராடி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரியை நாகையில் அமைக்காமல் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"