தமிழ்நாடு

காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

தந்தி டிவி

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுமண தம்பதியர் திரண்டு தங்களது கல்யாண மாலையை காவிரியாற்றில் விட்டு புனித நீராடுவர். குற்றாலம், சேலம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொண்டாட்டம் களைகட்டும். காவிரி கரையோர மாவட்டங்களிலும் உற்சாகம் கரைபுரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி18 கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது. இதனிடையே மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி