தமிழ்நாடு

"கலாஷேத்ரா விவகாரம்".."அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்" - முன்னாள் நீதிபதி குழு பரிந்துரை

தந்தி டிவி

கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து, முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி சார்பில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவை நியமித்தது. மாணவிகளிடம், நேரில் மற்றும் ஆன்லைன் மூலம் விசாரித்த இந்தக் குழு, ஹரிபத்மனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், கல்லூரியின் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை