சென்னை மெரினா கடற்கரை முகத்துவாரம் அருகே திடீரென ஒரு வாலிபர் கடலில் குதித்து த*கொ*க்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மெரினா மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்நபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. போதையில் பெயரை மாற்றி மாற்றி கூறிவரும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக குதித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.