தமிழ்நாடு

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு

இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

வட மாநிலங்களில் மதரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இது நாட்டின் ஒற்றுமையை களங்கப்படுத்துவதாக கூறி முசாபர் நகரை சேர்ந்த சுதிர்குமார் என்ற வழக்கறிஞர், பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேச துரோக வழக்கை திரும்ப பெற பீஹார் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் தவறான புகார் அளித்ததாக சுதிர்குமார் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை