தமிழ்நாடு

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எய்தனூரில் அடுத்தடுத்து 8 வீடுகளின் சுவர்களில் மாம்பழ சின்னம் தேர்தலுக்காக வரையப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில், மர்ம கும்பல் ஒன்று மாம்பழ சின்னம் வரையப்பட்டிருந்த ஆறுமுகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளது. கல் வீடு என்பதால் தீ உடனடியாக அணைந்துள்ளது. தொடர்ந்து சீதாராமன் என்பவர் வீட்டிலும் குண்டு வீசி, காருக்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர். சத்தம் கேட்டு வந்து பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5க்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு