தமிழ்நாடு

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?

மானாமதுரை அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் இவரது மனைவி கோமதி கூலி வேலை செய்து தன் 3 பிள்ளைகளை வளர்த்து வந்தார். கபிலரசன், கலையரசன், காவ்யா என 3 சிறுவர்களும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோமதி உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளும் தனித்து விடப்பட்டனர். இவர்களை வயதான பாட்டி மட்டும் பராமரித்து வரும் நிலையில் போதிய வருமானமின்றி வீட்டு வேலைகளை தாங்களே செய்து வருகின்றனர். உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் இவர்கள் 3 பேருக்கும் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்