Cuddalore | Vinayagar Chathurthi | தங்க நகையோடு விநாயகர் சிலையை ஆற்றில் பறக்கவிட்ட நபர் - சல்லடைபோடும் பொதுமக்கள்
கடலூரில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, சிலையுடன் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியையும் ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் வைத்து வழிபட்ட சிலைக்கு ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை அணிவித்திருந்தார். 3-வது நாளில் சிலையை கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உப்பனாற்றில் கரைத்துள்ளார். சிலையை வீசிய பிறகுதான் தங்க சங்கிலி அணிவித்தது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆற்றில் தேடியும் நகை கிடைக்கவில்லை.