தமிழ்நாடு

கண்ணில் பட்டவர்களை எல்லாம் இச்சைக்கு அழைத்த காம கொடூரன் - பக்கத்து வீட்டு பெண் செய்த காரியம்

தந்தி டிவி

சங்ககிரி அருகே, பாலியல் இச்சைக்கு அழைத்த முதியவரை ஓடஓட கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில், பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்...

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. நெசவு கூலித் தொழிலாளியான இவர், திருமணமான ஓராண்டில் இருந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். 50 வயதில் தாயுடன் வசித்துவரும் இவர், மதுபோதையில் அடிக்கடி அக்கம் பக்கத்து பெண்களை பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று பக்கத்து வீட்டுக்காரரான சண்முகம் என்பவரின் மனைவி கவிதாவை இவர் மதுபோதையில் பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவிதா, தனது கணவர் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் உடன் சேர்ந்து, மாரிமுத்துவை கட்டையால் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில், கவிதா, அவரது கணவர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு