தமிழ்நாடு

ரயிலில் காணாமல் போன செருப்பு - எப்ஐஆர் பதிவு...

விரைவு ரயிலில் செருப்பு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் முபாய் திக்கா என்பவர், கேரளா சென்று விட்டு, மங்களூர் விரைவு ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். 2ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், பயணம் செய்த அவர், தனது செருப்பை, கீழ் படுக்கைக்கு அடியில் போட்டு விட்டு, மேல் படுக்கையில் தூங்கியுள்ளார். காலையில், கண் விழித்த அவர், தனது செருப்பை காணாமல் அதிர்ச்சியடைந்தார். ரயில் பெட்டி முழுவதும் தேடிப் பார்த்தும் தனது செருப்பு கிடைக்காததால், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்ததும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். காணாமல் போன தனது செருப்பின் விலை 9 ஆயிரம் ரூபாய் எனவும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதில் கூறியுள்ளார். புகாரின்பேரில், எப்ஐஆர் பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்