தமிழ்நாடு

ரயிலில் காணாமல் போன செருப்பு - எப்ஐஆர் பதிவு...

விரைவு ரயிலில் செருப்பு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் முபாய் திக்கா என்பவர், கேரளா சென்று விட்டு, மங்களூர் விரைவு ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். 2ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், பயணம் செய்த அவர், தனது செருப்பை, கீழ் படுக்கைக்கு அடியில் போட்டு விட்டு, மேல் படுக்கையில் தூங்கியுள்ளார். காலையில், கண் விழித்த அவர், தனது செருப்பை காணாமல் அதிர்ச்சியடைந்தார். ரயில் பெட்டி முழுவதும் தேடிப் பார்த்தும் தனது செருப்பு கிடைக்காததால், சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்ததும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். காணாமல் போன தனது செருப்பின் விலை 9 ஆயிரம் ரூபாய் எனவும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதில் கூறியுள்ளார். புகாரின்பேரில், எப்ஐஆர் பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"