சென்னை திருவான்மியூரில் மது போதையில் விளம்பர பலகை மீது ஏறிய 50 வயது தனசேகர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி ‘ஸ்கை லிப்ட்“ மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தனசேகரை அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.