தமிழ்நாடு

செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழ வியாபாரியான இவர் மாணிக்கம்பாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில், குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மது அருந்திவிட்டு வந்த செல்வராஜ், அருகிலிருந்த 250 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் 3 பேர், அவரை மீட்பதற்காக செல்போன் கோபுரத்தில் ஏறியுள்ளனர். ஆனால் அவர்களும் செல்போன் கோபுரத்தின் பாதி வழியிலேயே நின்றதைத் தொடர்ந்து, அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் செல்போன் கோபுரத்தில் ஏறியவர்களை 2 மணி போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்